செய்திகள்
திருட்டு

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

Published On 2021-02-26 03:31 GMT   |   Update On 2021-02-26 03:31 GMT
பழனி அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டி:

பழனி சாமிநாதபுரம் அருகேயுள்ள ஜி.வி.ஜி. நகரை சேர்ந்த தொழிலாளியான முத்துசாமி மனைவி பட்டீஸ்வரி (வயது 46). நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக பட்டீஸ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News