செய்திகள்
கோப்புபடம்

கயத்தாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-02-25 16:27 GMT   |   Update On 2021-02-25 16:27 GMT
கயத்தாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே சவலாப்பேரி பஞ்சாயத்தை சேர்ந்த நாகம்பட்டி அன்னராஜ் மகன் கனகராஜ்(வயது 29). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவரும், தெற்கு கோனார் கோட்டை புதூரைச் சேர்ந்த ் சுடலை (50) என்பவரும் செட்டிகுறிச்சி யில் இருந்து வெள்ளாளங்கோட்டை செல்லும் வழியில் உள்ள பாறை பெருமாள் கோவில்அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்அரிக்கண்ணன் ஆகியோர் அந்த 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News