செய்திகள்
பிரதமர் மோடி

திமுகவும், காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகள்: பிரதமர் மோடி

Published On 2021-02-25 12:39 GMT   |   Update On 2021-02-25 12:39 GMT
பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ‘‘வணக்கம் தமிழகம், வணக்கும் கோவை, வெற்றிவேல் வீரவேல் என பேச்சைத் தொடங்கினார்.
கோவை வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள தேர்தல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ச்சியை மையப்படுத்தும் அரசாங்கத்தையே மக்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

கூட்டாட்சி- கூட்டுறவு என்ற கொள்கையை மையப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறோம். விவசாயத்துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முயற்சி. தமிழக கலாச்சார விழாக்கள் உலகளவில் பெருமை பெற்றது. திமுகவும், காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகள். சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக - காங். ஆட்சியை பிடிக்க நினைக்கிறது.

சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. சுங்கவரி உள்ளிட்ட வரி குறைப்பு மூலம் தொழில் மேம்பாட்டுக்கு உதவியுள்ளோம். கடந்த 7 ஆண்டில் ஜவுத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News