செய்திகள்
கோப்புபடம்

நெல்லை மாவட்டத்தில் வாலிபர்-தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-02-25 11:35 GMT   |   Update On 2021-02-25 11:35 GMT
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் வாலிபர் மற்றும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள பரதர் உவரியை சேர்ந்தவர் லூர்து மரியான். இவரது மகன் அஜீஸ் (வயது30). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அந்த பெண் அவரை திருமணம் செய்ய மறுத்து, பேசுவதை நிறுத்தி கொண்டாராம். இதனால் மனம் உடைந்த அஜீஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது59). இவர் பனைமரம் ஏறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திருச்செல்வத்தால், முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News