செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி சென்னை வந்தார்- விமான நிலையத்தில் கவர்னர் வரவேற்பு

Published On 2021-02-25 06:23 GMT   |   Update On 2021-02-25 06:23 GMT
புதுவை, கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுவை மாநிலம் மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.

இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை மோடி வந்தடைந்தார். விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் பா.ஜனதா கூட்டத்திலும் பங் கேற்கிறார்.

புதுவை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் இன்று பிற்பகலில் சென்னை வரும் மோடி இங்கிருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News