செய்திகள்
விபத்து பலி

எடப்பாடியில் சரக்கு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

Published On 2021-02-24 10:35 GMT   |   Update On 2021-02-24 10:35 GMT
எடப்பாடியில் சரக்கு ஆட்டோ மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:

கும்பகோணத்தை சேர்ந்தவர் கிட்டப்பா. இவரது மனைவி மனோன்மணி (வயது 60). இவர்களது மகன் ராமச்சந்திரன் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மகன் வீட்டிற்கு வந்த கிட்டப்பாவும், மனோன்மணியும், எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மூதாட்டி மனோன்மணி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News