சசிகலாவுடன் சீமான், சரத்குமார் சந்திப்பு- பாரதிராஜாவும் சந்தித்தார்
சென்னை:
சசிகலா சென்னை திரும்பிய பிறகு இன்று முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக சசிகலாவை எனக்கு நன்றாக தெரியும். குடும்பத்தில் ஒருவர் போல் பழகியதால், மரியாதை நிமித்தமாக சந்தித்து, உடல்நலம் விசாரித்தேன் என்றார்.
சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வரும் நிலையில் சசிகலாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து சசிகலாவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் சந்தித்து பேசினார்கள்.