செய்திகள்
கோப்புப்படம்

மருத்துவமனையின் 7-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

Published On 2021-02-23 23:59 GMT   |   Update On 2021-02-23 23:59 GMT
சிகிச்சையில் இருந்த கணவர் இறந்த அதிர்ச்சியில் மருத்துவமனையின் 7-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்தவர் சேகரன் (வயது 50). இவருடைய மனைவி நாகரத்தினம் (46). இவர்களுக்கு திருமணமாகி 26 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் சேகரன் நேற்று காலை 8 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள குமரன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவலை அவருடைய மனைவி நாகரத்தினத்திடம் டாக்டர்கள் கூறினர்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகரத்தினம் கதறி அழுதார். பின்னர் அவர், அந்த மருத்துவமனையில் 7-வது மாடிக்கு சென்று திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்து மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிகிச்சையில் இருந்த கணவர் இறந்த அதிர்ச்சியில், அந்த மருத்துவமனை யின் 7-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News