செய்திகள்
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27ம் தேதி பணி நாள் - தமிழக அரசு அறிவிப்பு
சட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பிப்ரவரி 27-ம் தேதி பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக சட்டசபையில் 27-ம் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன. அன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பிப்ரவரி 27-ம் தேதி பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக சட்டசபையில் 27-ம் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன. அன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.