செய்திகள்
தஞ்சை பகுதியில் நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதனால் நாளை(புதன்கிழமை) ஈஸ்வரி நகர், தமிழ்நகர், தோப்புகுளம், மானோஜிப்பட்டி ரோடு, ரெட்டிபாளையம்ரோடு, முத்தமிழ்நகர், விக்டோரியா காலனி, முனிசிபல் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.