செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தற்கொலை

Published On 2021-02-22 12:01 GMT   |   Update On 2021-02-22 12:01 GMT
திருச்செந்தூர் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் மத்திமான்விளையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் சைக்கிள் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் கடன் வாங்கி உள்ளார். கடனை அடைக்க முடியாததால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 18-ந் தேதி அவருடைய மனைவி சுசீலா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகேந்திரன் தனது மனைவியிடம் குருணை மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News