செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரம் பேர் 2-வது முறையாக தடுப்பூசி போட்டுள்ளனர்

Published On 2021-02-21 01:55 GMT   |   Update On 2021-02-21 01:55 GMT
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 631 பேர் முதல் முறையாகவும், 30 ஆயிரத்து 981 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 645 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 563 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் 20 ஆயிரத்து 57 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 506 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 15 ஆயிரத்து 149 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 414 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 352 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 260 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 631 பேர் முதல் முறையாகவும், 30 ஆயிரத்து 981 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News