செய்திகள்
கைது

கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழி மறித்து பணம் பறிப்பு- 2 பேர் கைது

Published On 2021-02-18 11:04 GMT   |   Update On 2021-02-18 11:04 GMT
கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை தேர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஜாக் (வயது76). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றார். பின்னர் மரக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோரையாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்த அப்துல்ரஜாக்கை 2 பேர் வழி மறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அப்துல்ரஜாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூத்தாநல்லூர் அக்கரைப்புதுத்தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன் (30), லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த வினோத் (27) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் அப்துல்ரஜாக்கை வழி மறித்து பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கார்த்திகேயன், வினோத் ஆகிய 2 பேரையும் கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News