செய்திகள்
திருமண ஆசைகாட்டி என்ஜினீயரிங் மாணவி கர்ப்பம்- வாலிபர் கைது
தாடிக்கொம்பு அருகே திருமண ஆசைகாட்டி என்ஜினீயரிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் திருமண ஆசைவார்த்தை கூறி சூர்யா, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். இதையறிந்த சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இதற்கிடையே மாணவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் அவர் திருப்பூரில் இருப்பதும், சூர்யா அவரை பலாத்காரம் செய்ததில் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூருக்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.