செய்திகள்
ப சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Published On 2021-02-16 03:23 GMT   |   Update On 2021-02-16 03:23 GMT
கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சென்னை:

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது.

இந்நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.
Tags:    

Similar News