செய்திகள்
விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை – எல் முருகன்
விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.