செய்திகள்
ஓ.பன்னீர் செல்வம்

பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2021-02-14 07:04 GMT   |   Update On 2021-02-14 07:04 GMT
பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது என விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னை:

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.4,486 கோடி செலவில் நிறைவுற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பின்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி.

காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News