செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

16-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

Published On 2021-02-13 11:21 GMT   |   Update On 2021-02-13 11:21 GMT
மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மதுரை:

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம்.சொக்கு பிள்ளைநகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகளில் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இ்ந்த தகவலை மதுரை மேற்கு அரசரடி மின்செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News