செய்திகள்
கோப்புபடம்

திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

Published On 2021-02-12 13:22 GMT   |   Update On 2021-02-12 13:22 GMT
திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே மறவன்குளம் ரெயில்வே கேட் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News