செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-02-12 12:26 GMT   |   Update On 2021-02-12 12:26 GMT
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16.02.2021 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 16.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News