செய்திகள்
விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி பற்றி இனி அதிமுகவிடம் கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2021-02-12 06:33 GMT   |   Update On 2021-02-12 07:22 GMT
கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை:

தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள்.

* கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை.



* தேமுதிக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும்.

* தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News