செய்திகள்
கோப்புபடம்

அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி - 3 பேர் கைது

Published On 2021-02-11 08:40 GMT   |   Update On 2021-02-11 08:40 GMT
சென்னையில் மத்திய அரசு வேலைகளை வாங்கி தருவதாகவும், எம்.பி.சீட் வாங்கி தருவதாகவும் பல மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னையில் மத்திய அரசு வேலைகளை வாங்கி தருவதாகவும், எம்.பி.சீட் வாங்கி தருவதாகவும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் எம்.பி. சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடியை இந்த கும்பல் சுருட்டியுள்ளது.

கவர்னர் மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து ஈமெயில் அனுப்பவது போல மோசடி செய்து கைவரிசை காட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருந்தும், கவர்னர் மாளிகை அலுவலகம் சார்பிலும் அளித்த புகாரின் அடிப்படையில் இது பற்றி உரிய விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

இதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மைசூரை சேர்ந்த மகாதேவ் (54), அவரது மகன் அங்கித் (29), ஓசூரை சேர்ந்த ஓம் (34) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

கடந்த ஒருவார காலமாக பெங்களூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News