செய்திகள்
கொள்ளை

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2021-02-10 15:22 GMT   |   Update On 2021-02-10 15:22 GMT
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதூர்:

மதுரை ஒத்தக்கடை உத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 35). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள், டி.வி. உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News