செய்திகள்
கைது

ஊத்துக்குளியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- சிறுவன் கைது

Published On 2021-02-07 23:37 GMT   |   Update On 2021-02-07 23:37 GMT
ஊத்துக்குளியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறிய பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்குளி:

ஊத்துக்குளி டவுன் பகுதியை சேர்ந்த சிறுவன் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். அந்த சிறுவன், 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Tags:    

Similar News