செய்திகள்
தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் (வயது25) மற்றும் காசிமாயன் (34) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக 1 கிலோ 600 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியன், காசிமாயன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.