செய்திகள்
கைது

நாடு முழுவதும் சக்கா ஜாம் போராட்டம்- விவசாயிகள் கைது

Published On 2021-02-06 07:53 GMT   |   Update On 2021-02-06 07:53 GMT
தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் இன்று ‘சக்கா ஜாம்’ எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு விவசாயிகளின் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான்-அரியானா எல்லையான ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொகாலி உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் சக்கா ஜாம் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம் அருகே சேத்தூர், கடலூர், தஞ்சை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரி அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News