செய்திகள்
சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.22½ லட்சம்
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.22½ லட்சம் ஆகும்.
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்து 173-ம், தங்கம் 20 கிராமும், வெள்ளி 690 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.
உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். சாய்ராம் பக்தர்கள் குழுவினர்கள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். சாய்ராம் பக்தர்கள் குழுவினர்கள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.