செய்திகள்
பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்
தமிழகத்தில் பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
இந்நிலையில் தமிழகத்தில் பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்கப்பட்ட சட்டசபை கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று தொடங்கப்பட்ட சட்டசபை கூட்டத்தொடர் மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நாளை சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
இந்நிலையில் தமிழகத்தில் பிப்.5ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்கப்பட்ட சட்டசபை கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று தொடங்கப்பட்ட சட்டசபை கூட்டத்தொடர் மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நாளை சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.