செய்திகள்
மு.க.ஸ்டாலின்

"பெரியப்பா சொல்கிறேன், ஒழுங்காக படி" - எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக கூறிய ஸ்டாலின்

Published On 2021-01-31 15:10 GMT   |   Update On 2021-01-31 15:10 GMT
பெரியப்பாவாக சொல்கிறேன், ஒழுங்காக படி என்று எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 
 
நான் உங்க அப்பாவாக இல்ல, பெரியப்பாவாக இருந்து சொல்கிறேன், ஒழுங்கா படி என்றும் அதே நேரத்தில் எந்த அளவுக்கு நீ அரசியலில் ஆர்வத்துடன் இருக்கியோ அதையும் நீ ஒழுங்கா கவனிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எனக்கு அறிவுரை கூறினார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இப்போ எம்ஜிஆரை பற்றி முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். என்றைக்காவது முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் முகத்தை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா? எம்ஜிஆர் குறித்து எதாவது கேள்விப்பட்டிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார். 

இன்னைக்கு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதால் அவர்கள் பெயர்களை கூறிக்கொண்டு வருகிறார்கள்.

பேசுவதற்கு முன்னர் எம்.ஜி.ஆர்.ருடன் இருக்கும் புகைப்படத்தை மக்களிடம் காண்பித்தார் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Tags:    

Similar News