செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2021-01-31 07:42 GMT   |   Update On 2021-01-31 07:42 GMT
அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை:

சசிகலா அ.தி.மு.க. கொடி பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

சசிகலாவும் அவரோடு இருந்தவர்களும், 2017-ம் ஆண்டிலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத அவர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை. அது சட்டத்திற்கும் எதிரானது.

மேலும் அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் உரிமைகள் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News