செய்திகள்
தமிழக அரசு

பிப்.8 முதல் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

Published On 2021-01-31 06:49 GMT   |   Update On 2021-01-31 06:49 GMT
தமிழகத்தில் பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

• தமிழகத்தில் பிப்ரவரி 28-ந்தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

• பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி.

• இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ந்தேதி முதல் தொடங்க அனுமதி.

• தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்பாடுகள் இன்றி இயங்கலாம்.
 
• வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம்.

• நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

• அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

• ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News