செய்திகள்
எல் முருகன்

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது திமுக அவதூறு வழக்கு

Published On 2021-01-30 02:53 GMT   |   Update On 2021-01-30 02:53 GMT
முரசொலி இட விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை:

முரசொலி இட விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இதற்காக ஆர்.எஸ்.பாரதி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த மனுவில், அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக எல்.முருகனைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக பிப்ரவரி 4-ந் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தது.
Tags:    

Similar News