செய்திகள்
பாலசமுத்திரம் அருகே மாட்டு கொட்டகையில் தீ
பாலசமுத்திரம் அருகே மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
பழனி:
பாலசமுத்திரம் அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நிலைய அலுவலர் ஆண்டவராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் கொட்டகையின் பெரும்பகுதி எரிந்து நாசமானது. அதேபோல் கொட்டகை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் எரிந்து சேதமானது.