செய்திகள்
கோப்புபடம்

நெல்லை அருகே மது விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-28 10:53 GMT   |   Update On 2021-01-28 10:53 GMT
நெல்லை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

பாளையங்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கல அரசு (வயது 30) என்பவர் தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்து வந்தார். அந்த பழங்களுக்கு அடியில் மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த தள்ளு வண்டியை சோதனை செய்தனர். அதில் 50 மதுபாட்டில்கள் இருந்தது. உடனே போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வெங்கல அரசை கைது செய்தனர்.

Tags:    

Similar News