செய்திகள்
கோப்பு படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா

Published On 2021-01-28 10:21 GMT   |   Update On 2021-01-28 10:21 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,584 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 11,378 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 110 பேர் பலியான நிலையில், 96 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News