செய்திகள்
விபத்து

விபத்தில் போலீஸ் ஏட்டு பலி

Published On 2021-01-28 06:59 GMT   |   Update On 2021-01-28 06:59 GMT
கோவில்பட்டி இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவில்பட்டி:

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அஜித்குமார் (வயது 30). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மதுரை - நெல்லை நான்குவழிச்சாலையில் நெல்லை மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த அஜித்குமாருக்கு மீனா என்ற மனைவியும், தாரணி (4) என்ற பெண் குழந்தையும்உள்ளனர். அஜித்குமாரின் தந்தை அய்யப்பன் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
Tags:    

Similar News