செய்திகள்
தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை

திருச்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை

Published On 2021-01-27 18:13 GMT   |   Update On 2021-01-27 18:13 GMT
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக வாகன டிரைவராக பணிபுரியும் திருநங்கை எம்.சினேகா தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி:

திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக வாகன டிரைவராக பணிபுரியும் திருநங்கை எம்.சினேகா தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து வணங்கினார். திருநங்கை சினேகா பேசும்போது, ‘ஆசிரியர்கள் தான் நாம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்க கூடியவர்கள். நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும் என நம்புகிறேன்' என்றார்.
Tags:    

Similar News