செய்திகள்
மல்லிகைப்பூ

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2021-01-27 05:03 GMT   |   Update On 2021-01-27 05:03 GMT
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் அருகே தோவாளை பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவியும்.

இங்கு பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். அதிக மழை, பனிப் பொழிவு போன்ற காலங்களில் பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அப்பொழுது பூக்களின் வரத்து குறையும். அந்த சமயங்களிலும் பூக்களின் விலை உயரும்.

இந்த நிலையில் தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ.2,500-க்கு விற்பனையானது. இதே போல் பிச்சி ரூ.1,750, முல்லை ரூ.1,700, சம்பங்கி ரூ.800-க்கு விற்பனையானது.

மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

அரளிப்பூ கழனி ரூ.200, கனகாம்பரம் ரூ.1,250, வாடாமல்லி ரூ.100, சிவப்பு கேந்தி ரூ.90, ரோஜா (100 எண்ணம்) ரூ.40, பட்டன்ரோஸ் ரூ.130, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) 2,500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.180, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.90, சிவந்தி (மஞ்சள்) ரூ.150, வெள்ளை சிவந்தி ரூ.150, ஸ்டெம்புரோஸ் ஒரு கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த அளவு பூக்கள் விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்பது குறித்து பூ வியாபாரி கிருஷ்ண குமார் கூறியதாவது:-

தோவாளை பூ மார்க்கெட்டுக்கு தற்போது பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் தொடர்ந்து இருப்பதால், தேவை அதிகரித்து உள்ளது. இதனால் பூக்கள் விலை அதிகரித்து உள்ளது என்றார்.
Tags:    

Similar News