செய்திகள்
கைது

தோகைமலையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

Published On 2021-01-26 10:45 GMT   |   Update On 2021-01-26 10:45 GMT
15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:

தோகைமலை பகுதியை சேர்ந்த ஒருவர், தனது 15 வயது மகளை காணவில்லை என்று தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தார். 

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, விராலிமலை கவுண்டம்பட்டியை சேர்ந்த சித்திரன் என்பவரின் மகன் செல்வம் (வயது 45) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News