செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா

Published On 2021-01-25 20:02 GMT   |   Update On 2021-01-25 20:02 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 182 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 221 ஆக உள்ளது.
Tags:    

Similar News