செய்திகள்
திண்டிவனத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
திண்டிவனத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
திண்டிவனம்:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து நேற்று முன்தினம் லாரி ஒன்று மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடாவை சேர்ந்த நாகசந்பாபு (வயது 40) என்பவர் ஓட்டிச்சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ரமணன் (37) என்பவர் வந்தார்.
இந்த லாரி, திண்டிவனம் அருகே நேற்று மதியம் நத்தமேடு சந்திப்பில் வந்த போது, எதிரே சென்ற கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி, எதிரே சென்ற புதிய காரின் பக்கவாட்டில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் நாகசந்பாபு படுகாயமடைந்தார். மேலும் லாரி மோதியதில் காரின் பின்பக்கம் சேதமானது. காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த நாகசந்பாபு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால், சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து நேற்று முன்தினம் லாரி ஒன்று மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடாவை சேர்ந்த நாகசந்பாபு (வயது 40) என்பவர் ஓட்டிச்சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ரமணன் (37) என்பவர் வந்தார்.
இந்த லாரி, திண்டிவனம் அருகே நேற்று மதியம் நத்தமேடு சந்திப்பில் வந்த போது, எதிரே சென்ற கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி, எதிரே சென்ற புதிய காரின் பக்கவாட்டில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் நாகசந்பாபு படுகாயமடைந்தார். மேலும் லாரி மோதியதில் காரின் பின்பக்கம் சேதமானது. காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த நாகசந்பாபு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால், சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.