செய்திகள்
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 13 பேர் கைது
ராமநாதபுரம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுத்து வழக்குபதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.