செய்திகள்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை

குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2021-01-25 09:58 GMT   |   Update On 2021-01-25 09:58 GMT
குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
திருச்சி:

குடியரசு தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை திருச்சி வந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News