செய்திகள்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

Published On 2021-01-25 05:35 GMT   |   Update On 2021-01-25 05:35 GMT
குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்:

நாட்டின் 72-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், ஏட்டுகள் கார்த்திக், காளிதாஸ், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்நாதன், சேகர், தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீஸ்காரர்கள் மோகன், ராமராஜன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் லக்கி உதவியுடனும் ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News