செய்திகள்
போலீசார் விசாரணை

நெல்லையில் குளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்- போலீசார் விசாரணை

Published On 2021-01-25 04:46 GMT   |   Update On 2021-01-25 04:46 GMT
நெல்லையில் குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வேய்ந்தான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மையப்பகுதியில் நேற்று காலை ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி அழுகிய நிலையில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அவரது சட்டைப்பையில் இருந்து கிடைத்த ஓட்டுனர் உரிமத்தை பார்த்த போது, நாங்குநேரி அருகே உள்ள கருவேலங்குளம் பகுதியை சேர்ந்த அரிகரசுதன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News