செய்திகள்
தற்கொலை

தஞ்சை அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2021-01-24 13:44 GMT   |   Update On 2021-01-24 13:44 GMT
தஞ்சை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் வல்லரசு (வயது 18). இவர் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வல்லரசு நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வல்லரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News