செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தேசிய வாக்காளர் தினம்- கவர்னர் நாளை விருது வழங்குகிறார்

Published On 2021-01-24 08:03 GMT   |   Update On 2021-01-24 08:03 GMT
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை 11 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் விருதுகள் வழங்கி கவர்னர் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநில தேர்தல் கமி‌ஷனர் பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம், மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News