செய்திகள்
கொலை

குன்னம் அருகே சொத்து பிரச்சனையில் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்

Published On 2021-01-24 05:37 GMT   |   Update On 2021-01-24 05:37 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை கத்தியால் குத்தி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவருக்கு பழனியம்மாள் என்ற மகளும், தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

சொத்து தொடர்பாக கருப்பையாவுக்கும், அவரது மகன் தினேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தந்தை, மகன் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதை அறிந்த கருப்பையாவின் தம்பி பழனிசாமி இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தினேஷ்குமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் கருப்பையாவின் வயிற்றில் குத்தினார். தொடர்ந்து, தடுக்க முயன்ற பழனிசாமியின் கை, கால்களிலும் கத்தியால் குத்திவிட்டு தினேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார்.

நள்ளிரவில் யாரும் இல்லாததால் பழனிசாமியும், கருப்பையாவும் மருத்துவமனைக்கு நடந்து சென்றனர். அப்போது, வழியில் ரத்தம் அதிகம் வெளியேறியதால் கருப்பையா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News