செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அடுத்த நடவடிக்கை என்ன?: முதலமைச்சர் 29-ந்தேதி ஆலோசனை

Published On 2021-01-24 04:09 GMT   |   Update On 2021-01-24 04:09 GMT
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக வரும் 29-ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன்பிறகு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

அந்த வகையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக வரும் 29-ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை, பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

Similar News