செய்திகள்
காட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
காட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
காட்பாடி:
காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் அடிக்கடி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப்போனது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காட்பாடி இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
வேலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), தோட்டப் பாளையத்தை சேர்ந்த அஜய் (22) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காங்கேயநல்லூர் இலக்கியசெல்வன், செங்குட்டை காமராஜ், குமரப்பநகர் ரகுமான் உள்பட 5 பேரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் அடிக்கடி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப்போனது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காட்பாடி இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
வேலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), தோட்டப் பாளையத்தை சேர்ந்த அஜய் (22) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காங்கேயநல்லூர் இலக்கியசெல்வன், செங்குட்டை காமராஜ், குமரப்பநகர் ரகுமான் உள்பட 5 பேரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.